சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு


சங்கராபுரம் அருகே  பெண் தீக்குளிப்பு
x
தினத்தந்தி 22 May 2021 4:22 PM GMT (Updated: 22 May 2021 4:22 PM GMT)

சங்கராபுரம் அருகே பெண் தீக்குளிப்பு

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கிடங்கன்பாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சிவசக்தி(26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு அவரது மனைவியை அடிக்கடி திட்டி, தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. 

சம்பவத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாட பொருட்கள் வாங்கி வரும்படி கூறிய சிவசக்தியை பிரபு திட்டி, செத்துப்போ என்று கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சிவசக்தி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்தார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்து சிவசக்தியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிவசக்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story