தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2021 3:25 PM GMT (Updated: 26 May 2021 3:25 PM GMT)

தூததுக்குடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில், கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (வயது 21), லெவிஞ்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார்களாம்.
உடனடியாக போலீசார் சுரேஷ், மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Next Story