அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் அருகே தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பழம், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூைஜ நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நாணப்பரப்பு, கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் பவுர்ணமியையொட்டி சிறப்பு தீபாராதனை நடந்தது.
Related Tags :
Next Story