வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை
அருப்புக்கோட்டையில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை,
ஊரடங்கின் போது பொது மக்கள் சிரமமின்றி வாங்கும் வகையில் காய்கறி மற்றும் பழங்களை வாகனங்கள் மூலமாக நேரடியாக விற்பனை செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி அருப்புக்கோட்டை பகுதிகளிலும் இந்த காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. நகராட்சி ஆணையாளர் முகமது சாகுல் ஹமீது, தாசில்தார் ரவிச்சந்திரன், உழவர்சந்தை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூர்த்தி, ஜெகதீஷ், கோகிலா ஆகியோர் மேற்பார்வையில் துறை அதிகாரிகள் சரியான விலையில் காய்கறி விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story