436 பேருக்கு கொரோனா தொற்று


436 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 27 May 2021 6:34 PM GMT (Updated: 27 May 2021 6:34 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 19,397 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆயிரத்து 712 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 128 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 1250 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 436 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,833-ஆக உயர்ந்துள்ளது. 


Next Story