தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை


தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 May 2021 9:47 PM GMT (Updated: 29 May 2021 9:47 PM GMT)

தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தை சுற்றியுள்ள பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ெவளியே தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து எச்சரித்ததோடு, அதில் முக கவசம் அணியாதவர்களுக்கு, அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறி, முக கவசம் அணிய வலியுறுத்தினர். மேலும் பொதுமக்கள் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தினர்.

Next Story