கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி


கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2021 3:51 PM GMT (Updated: 30 May 2021 3:51 PM GMT)

கோவில்பட்டியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் 93 பெண்கள் உள்பட 169 பேர் கொரோனாவுக்கு சிகிச்ைச பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக தொற்று ஏற்பட்ட 10 பேர் சிகிச்ைசக்காக அனுமதிக்கப்பட்டனர். நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். விட்டிலாபுரத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி இளையரசனேந்தலைச் சேர்ந்த 48 வயது ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story