விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 30 May 2021 6:42 PM GMT (Updated: 30 May 2021 6:42 PM GMT)

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நொய்யல்
கரூர் மாவட்டம் கரைப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் திருக்காடுதுறை, நடையனூர், முத்தனூர், கோம்புப்பாளையம், சேமங்கி, புன்னம் சத்திரம், புன்னம், தவிட்டுப்பாளையம் புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 

Next Story