200 பேருக்கு கொரோனா தடுப்பூசி


200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 May 2021 6:53 PM GMT (Updated: 30 May 2021 6:53 PM GMT)

ஆலங்குளத்தில் 200 பேருக்கு கொரோனா தடு்ப்பூசி போடப்பட்டது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் தலைமையில் ஆலங்குளம் பஞ்சாயத்து தலைவர் காத்தம் மாள் பசுபதி ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.  வட்டார மருத்துவ அதிகாரி செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் காளீஸ்வரி, கீர்த்திகா ஆகியோர் அடங்கிய குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் வெம்பகோட்டை மேற்கு ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் ரவிசங்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் பாலகிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு வட்டார தலைவர் கிருஷ்ணசாமி, ஆலங்குளம் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story