முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 May 2021 7:04 PM GMT (Updated: 30 May 2021 7:04 PM GMT)

சாத்தூரில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாத்தூர், 
தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் உத்தரவின் பேரில் சாத்தூர் பகுதிகளில் தேவை இன்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள், முக கவசம் அணியாதவர்கள், அரசு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு  நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் குமார், திருப்பதி ஆகியோர் அபராதம் விதித்தனர். மேலும் சாத்தூர் பகுதியில் இதுவரை அபராத தொகையாக ரூ.55 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story