முககவசம் அணியாத- சமூக இடைவெளியை பின்பற்றாத 57 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத- சமூக இடைவெளியை பின்பற்றாத 57 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 May 2021 7:25 PM GMT (Updated: 30 May 2021 7:25 PM GMT)

முககவசம் அணியாத- சமூக இடைவெளியை பின்பற்றாத 57 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கிலும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 34 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் அபராதமாக போலீசார் விதித்தனர். வருவாய்த்துறை சார்பில் முககவசம் அணியாத 18 பேருக்கு அபராதமாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600-ம், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story