52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 8:50 PM GMT (Updated: 30 May 2021 8:50 PM GMT)

கல்லலில் ஊரடங்கு விதிமுறை மீறிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்லல்,

கொரோனா பரவலை தடுக்க வருகிற 7-ந்தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கடந்த 20 நாட்களாக கல்லல் அக்ரஹாரம் இந்திரா நகர், ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் அனுமதியின்றி ஊர் சுற்றிய 52 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story