கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி


கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
x
தினத்தந்தி 31 May 2021 1:07 AM GMT (Updated: 31 May 2021 1:09 AM GMT)

கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் லோகநாதன் (வயது 16). இவர் மாதேப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாணவர் லோகநாதன் தனது நண்பரை அழைத்து கொண்டு செம்படம்புதூரில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகநாதன் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் லோகநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story