கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு 29 ஆயிரத்தை தாண்டியது


கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு  29 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 31 May 2021 4:56 PM GMT (Updated: 31 May 2021 4:56 PM GMT)

வைரஸ் தொற்றுக்கு மேலும் 411 பேர் இறந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்புக்கு 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பெங்களூரு:

வைரஸ் தொற்றுக்கு மேலும் 411 பேர் இறந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்புக்கு 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 22 ஆயிரத்து 329 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 16,604 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 4 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 411 பேர் உயிரிழந்தனர்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 90 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 44,473 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

 இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 61 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்து 730 ஆக உள்ளது. 
பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3,992 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

411 பேர் உயிரிழந்தனர்
பாகல்கோட்டையில் 194 பேர், பல்லாரியில் 437 பேர், பெலகாவியில் 910 பேர், பெங்களூரு புறநகரில் 383 பேர், பீதரில் 17 பேர், சாம்ராஜ்நகரில் 317 பேர், சிக்பள்ளாப்பூரில் 415 பேர், சிக்கமகளூருவில் 340 பேர், சித்ரதுர்காவில் 731 பேர், தட்சிண கன்னடாவில் 651 பேர், 

தாவணகெரேயில் 360 பேர், தார்வாரில் 291 பேர், கதக்கில் 240 பேர், ஹாசனில் 1,162 பேர், ஹாவேரியில் 134 பேர், கலபுரகியில் 93 பேர், குடகில் 193 பேர், கோலாரில் 465 பேர், கொப்பலில் 249 பேர், மண்டியாவில் 753 பேர், மைசூருவில் 1,171 பேர், ராய்ச்சூரில் 192 பேர், 

ராமநகரில் 90 பேர், சிவமொக்காவில் 589 பேர், துமகூருவில் 806 பேர், உடுப்பியில் 519 பேர், உத்தரகன்னடாவில் 641 பேர், விஜயாப்புராவில் 185 பேர், யாதகிரியில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 242 பேரும், பாகல்கோட்டையில் 4 பேரும், பல்லாரியில் 8 பேரும், பெலகாவியில் 15 பேரும், பெங்களூரு புறநகரில் 10 பேரும், பீதரில் ஒருவரும், சாம்ராஜ்நகரில் 3 பேரும், சிக்பள்ளாப்பூரில் 5 பேரும், சிக்கமகளூருவில் 4 பேரும், 

சித்ரதுர்காவில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், தாவணகெரேயில் ஒருவரும், தார்வாரில் 10 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 12 பேரும், ஹாவேரியில் 7 பேரும், கலபுரகியில் 2 பேரும், குடகில் ஒருவரும், கோலாரில் 2 பேரும், கொப்பலில் 8 பேரும், மண்டியாவில் 3 பேரும், 

மைசூருவில் 13 பேரும், ராய்ச்சூரில் 4 பேரும், ராமநகரில் 3 பேரும், சிவமொக்காவில் 13 பேரும், துமகூருவில் 8 பேரும், உடுப்பியில் 4 பேரும், உத்தரகன்னடாவில் 10 பேரும், 

விஜயாப்புராவில் 4 பேரும், யாதகிரியில் 2 பேரும் என மொத்தம் 411 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து குறைகிறது

கர்நாடகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. ஆயினும் வைரஸ் பரவல் வெகுவாக குறைவதால், கர்நாடக அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது. மாநில மக்களும் சற்று நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கி உள்ளனர். தலைநகர் பெங்களூருவில் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. இது நகரவாசிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

Next Story