500 பேருக்கு கொரோனா தடுப்பூசி


500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 31 May 2021 5:35 PM GMT (Updated: 31 May 2021 5:35 PM GMT)

சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

காரைக்குடி,

சங்கராபுரம் ஊராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர். மாங்குடி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் பாலசுப்பிரமணியன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் பசும்பொன் மனோகரன், புதுவயல் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதே போல சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் மாத்தூர், கண்டனூர், புதுவயல், பீர்க்கலைக்காடு ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை கார்த்தி சிதம்பரம் எம். பி. தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில் மாங்குடி எம்.எல்.ஏ. சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப.சின்னதுரை, மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், கண்டனூர் நகர காங்கிரஸ் தலைவர் குமார், புதுவயல் நகர காங்கிரஸ் தலைவர் முத்து கண்ணன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் அப்பாவு ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story