கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்


கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 May 2021 6:08 PM GMT (Updated: 31 May 2021 6:08 PM GMT)

கிணத்துக்கடவு பகுதியில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு,

கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியிடங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

இதையொட்டி கிணத்துக்கடவு பகுதியில்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் மற்றும் போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், ஆர்.எஸ்.ரோடு, கோவில்பாளையம், தாமரைக்குளம், வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி இ-பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. இதனை மீறி பலர் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே வருகின்றனர். முழு ஊரடங்கில் வெளியே வந்ததாக கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். 

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேவர வேண்டாம். நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story