மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 6:39 PM GMT (Updated: 31 May 2021 6:39 PM GMT)

சிவகாசியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் எஸ்.என்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு உள்ள பொட்டல் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த எஸ்.என்.புரம் தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ் (வயது 46) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களையும், ரூ.4280-யையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ரெங்கபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த காசி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 48 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story