கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி பலி


கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தம்பதி பலி
x
தினத்தந்தி 31 May 2021 8:03 PM GMT (Updated: 31 May 2021 8:03 PM GMT)

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே தம்பதி பலியானார்கள்.

கும்பகோணம்:-

கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே தம்பதி பலியானார்கள்.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மோட்டார் சைக்கிளில்...

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சோமு(வயது 60), இவரது மனைவி மீனா(55). இவர்களது மருமகன் ரமேஷ்(36).
இவர்கள் 3 பேரும் கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள ஓட்டலில் சமையல் செய்வதற்காக நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

கார் மோதி தம்பதி பலி

மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஓட்டி வந்தார். கும்பகோணத்தை அடுத்த கள்ளப்புலியூர் அருகே அவர்கள் வந்தபோது, கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சோமுவும், அவரது மனைவி மீனாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்தார்.

டிரைவர் கைது

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கும்பகோணம் தாலுகா போலீசார் விபத்தில் பலியான கணவன்-மனைவி உடல்களை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த ரமேஷை சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கார் டிரைவர் திருலோகியைச் சேர்ந்த கோபிநாத் (42) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story