மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது


மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 8:40 PM GMT (Updated: 31 May 2021 8:40 PM GMT)

மணல் அள்ள முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்

மணப்பாறை
திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த கண்ணூத்து பகுதியில் உள்ள அணையில் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக புத்தாநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ள முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார்  கண்ணூத்து பகுதியைச் சேர்ந்த முருகேசன் (வயது 34), ராஜ்மோகன் (28), சிலம்பம்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் (24), கல்லம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் (21) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story