சாராய ஊறல் பறிமுதல்; 2 பேர் கைது
தினத்தந்தி 1 Jun 2021 12:34 AM GMT (Updated: 1 Jun 2021 12:34 AM GMT)
Text Sizeசாராய ஊறல் பறிமுதல்; 2 பேர் கைது
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பேட்டலாடா கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 10 லிட்டர் ஊறலை கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக அரசு(வயது 42) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று அத்திக்கம்பை பகுதியில் சாராய ஊறல் வைத்திருந்த மணிகண்டன்(32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire