நாமக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2021 6:12 PM GMT (Updated: 1 Jun 2021 6:12 PM GMT)

நாமக்கல்லில் தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்:
நாமக்கல் ஆதிசேசன் தெருவை சேர்ந்தவர் கருமண்ணன். இவரது மகன் விஜயகுமார் (வயது 27). காய்கறி கடை நடத்தி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி கருமண்ணன் மாரடைப்பால் இறந்து விட்டார். இதையடுத்து மனஉளைச்சலில் இருந்து வந்த விஜயகுமார், நேற்று காலையில் நந்தவன தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று வருவதாக தாய் சாந்தியிடம் கூறி சென்றார்.
சிறிது நேரத்தில் தாயார் சாந்திக்கு போன் செய்த விஜயகுமார், தனது அப்பா சென்ற இடத்திற்கே செல்வதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார். இதையடுத்து சாந்தி பதறி அடித்து கொண்டு நந்தவன தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது விஜயகுமார் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து சாந்தி அக்கம்பக்க்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே விஜயகுமார் இறந்து விட்டார். தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் விஜயகுமார் தற்கொலை செய்தது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story