மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:35 PM GMT (Updated: 1 Jun 2021 8:35 PM GMT)

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

தரகம்பட்டி
கடவூர் புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடவூர் அருகே உள்ள பொன்னணியாறு அணை ஆற்றுவாரி பகுதியில் இரவு நேரத்தில் மணல் அள்ளி டிராக்டரில் ஏற்றி  வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாலவிடுதி இன்ஸ்பெக்டர் மோகன், அந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டார். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கருப்பசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story