குண்டர் சட்டத்தில் தந்தை, மகன் கைது


குண்டர் சட்டத்தில் தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 8:54 PM GMT (Updated: 2 Jun 2021 8:54 PM GMT)

திண்டுக்கல் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தொடர்புடைய தந்தை- மகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 30). ஆட்டோ டிரைவர். 

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜபாண்டியை சிலர் கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி விட்டு தப்பிவிட்டனர். 

இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர். இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜா (55), அவருடைய மகன் சரத்குமார் (29) ஆகியோர் ஆத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.


இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார்.

 இதையடுத்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த 2 பேரையும், போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story