13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
13-ந்தேதி திருமணம் நடக்க இருந்தநிலையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் லிங்கேஸ்வரி (வயது 19). இவருக்கு வருகிற 13-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் திருமணத்தில் லிங்கேஸ்வரிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் உள்ள அறையில் லிங்கேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story