கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 411 பேர் பாதிப்பு


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி - ஒரே நாளில் 411 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2021 10:57 PM GMT (Updated: 3 Jun 2021 11:19 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான நிலையில், நேற்று ஒரே நாளில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 48 வயது பெண். இவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதே போல 57 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் 24-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 15-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். 

அதே போல 71 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29-ந் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது.

இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 883 பேர் குணமடைந்துள்ளனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 34 ஆயிரத்து 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரத்து 71 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 780 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story