மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 6:27 PM GMT (Updated: 4 Jun 2021 6:27 PM GMT)

குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குத்தாலம்:
குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவ இளங்கோவன் (வயது 45). கட்டிட தொழிலாளியான இவர், தேரழுந்தூர் பள்ளிவாசல் தெருவில் முகமது குத்தூஸ் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இளங்கோவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.  
போலீசார் விசாரணை
இதுகுறித்து இளங்கோவனின் மனைவி மங்கையர்கரசி கொடுத்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story