சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 8:51 PM GMT (Updated: 4 Jun 2021 8:51 PM GMT)

சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்

க.பரமத்தி
தென்னிலை அருகே உள்ள தொட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் தனது வீட்டின் பின்புறம் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், அங்கு போடப்பட்டிருந்த சுமார் 300 லிட்டர் ஊறல் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1½ லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.


Next Story