வீட்டிற்குள் புகுந்த பாம்பு


வீட்டிற்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 5 Jun 2021 7:13 PM GMT (Updated: 5 Jun 2021 7:13 PM GMT)

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடித்துள்ளது.

நொய்யல்
கரூர் மாவட்டம் புகளூர் செம்படாபாளையம் அருகே உள்ள செந்தூர் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 45). இவரது வீட்டிற்குள் நேற்று 5 அடிநீளமுள்ள சாரைபாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்ட பூமிநாதன் அக்கம், பக்கத்தினரை அழைத்து பாம்பை விரட்டியும் வெளியே செல்லவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Next Story