கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தினத்தந்தி 5 Jun 2021 7:49 PM GMT (Updated: 5 Jun 2021 7:49 PM GMT)

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் அடுத்த பூளக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது35) மற்றும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (26).

இவர்கள் சோமனூர் அடுத்த எலச்சிபாளையம் மயான காட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் இருந்த 3 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து2பேரையும் கைது செய்தனர்.

Next Story