பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்


பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Jun 2021 12:08 AM GMT (Updated: 7 Jun 2021 12:10 AM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் தடையை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமலில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் வந்த 57 பேருக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 பேருக்கும் என 59 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story