180 பேருக்கு கொரோனா பரிசோதனை


180 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 7 Jun 2021 8:02 PM GMT (Updated: 7 Jun 2021 8:02 PM GMT)

ஆலங்குளத்தில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள கொரோனா பேரிடர் தகவல் மைய அலுவலகத்தில் ஆலங்குளம் ஊராட்சி தலைவர் காத்தம்மாள் பசுபதிராஜ் தலைமையில், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் நாகலட்சுமி, சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் ராஜலட்சுமி, வசந்தா ஆகிய சுகாதார குழுவினர் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.  

Next Story