நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு


நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 8:59 PM GMT (Updated: 7 Jun 2021 8:59 PM GMT)

நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் சக்தி கணேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
=======

Next Story