நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,444 ஆக அதிகரிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,444 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 7 Jun 2021 8:59 PM GMT (Updated: 7 Jun 2021 8:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,444 ஆக அதிகரிப்பு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 37,444 ஆக அதிகரித்து உள்ளது.
597 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 831 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 16 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,847 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 597 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,444 ஆக அதிகரித்து உள்ளது.
6,780 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 900 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை இம்மாவட்டத்தில் 30 ஆயிரத்து 342 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 322 பேர் இறந்து விட்ட நிலையில், 6,780 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஊரடங்கு மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
======

Next Story