பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Jun 2021 4:48 PM GMT (Updated: 8 Jun 2021 4:48 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே மணியாரம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விஜயகுமார் (வயது 23). இவர், 17 வயது பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்தார். 
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் டி.சுப்புலாபுரம் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அந்த மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், தேனி குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ்குமார், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Next Story