மணல் கடத்திய லாரி பறிமுதல்


மணல் கடத்திய  லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jun 2021 5:36 PM GMT (Updated: 9 Jun 2021 5:36 PM GMT)

மணல் கடத்திய லாரி பறிமுதல்

அன்னவாசல், ஜூன்.10-
அன்னவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் மாம்பட்டி வெள்ளாற்று பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து  அஜ்மல்கான் (வயது 24) என்பவரை கைது செய்து திருமயம் சிறையில் அடைத்தனர்.

Next Story