கோபுரத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி


கோபுரத்தில் மின்விளக்குகள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 9 Jun 2021 7:31 PM GMT (Updated: 9 Jun 2021 7:31 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் மின்விளக்கும் பொருத்தும் பணி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் மொத்தம் 11 அடுக்குகள் உள்ளன. இந்த 11 அடுக்குகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒளிரும். ஆனால் கடந்த சில நாட்களாக சில அடுக்குகளில் மட்டும் விளக்கு எரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த விளக்குகளை சரி செய்யும் பணி நடைபெற்றது. அப்போது ஊழியர்கள் கோபுரத்தில் பழுதான மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தினர்.

Next Story