தர்மபுரி மாவட்டத்தில் 263 பேருக்கு தொற்று; கொரோனாவுக்கு 5 பேர் பலி


தர்மபுரி மாவட்டத்தில் 263 பேருக்கு தொற்று; கொரோனாவுக்கு 5 பேர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 8:45 PM GMT (Updated: 9 Jun 2021 8:45 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,764 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 336 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்தனர். தற்போது தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,686 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 159 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,420 ஆகும்.

Next Story