காயமடைந்த முதியவர் சாவு


காயமடைந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 3:06 PM GMT (Updated: 10 Jun 2021 3:06 PM GMT)

பெரியகுளம் அருகே முன்விரோதம் காரணமாக முதியவர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பெரியகுளம்: 

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 71). இவரது வீட்டு அருகே தண்டபாணி (31) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

 இந்தநிலையில் வீடு கட்டும் பணி சம்பந்தமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

கடந்த மே மாதம் 29-ந் தேதி தண்டபாணி வீட்டு சுவரில் சிமெண்டு கலவை பூசும் பணி நடந்தது. அப்போது சிமெண்டு கலவை கோவிந்தராஜ் வீட்டிற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் தட்டி கேட்டார்.

 அப்போது ஆத்திரமடைந்த தண்டபாணி இரும்பு கம்பியால் கோவிந்தராஜை தாக்கினார். 

இதில் காயமடைந்த கோவிந்தராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 


அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தண்டபாணியை வலைவீசி தேடி வருகின்றனர். 

தற்போது கோவிந்தராஜ் இறந்ததால், கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக  மாற்றம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story