திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 5:12 PM GMT (Updated: 10 Jun 2021 5:12 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 482 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதில் 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும், 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் 2 பேர் திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகளிலும் நேற்று இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று 36 பெண்கள் உள்பட 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 29 ஆயிரத்து 757 ஆக உயர்ந்தது.  அதேநேரம் 351 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அந்த வகையில் இதுவரை 27 ஆயிரத்து 342 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 1,930 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story