கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி


கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 6:09 PM GMT (Updated: 10 Jun 2021 6:09 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

102 பேருக்கு ெதாற்று

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக படிப்படியாக கொரோனா தொற்று குைறந்து வருகிறது. கொரோனா தொற்று குறைவதற்கு ஊரடங்கு தான் காரணம் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

2 முதியவர்கள் பலி

 மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,520 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 148 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 67 வயதான முதியவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று இறந்தனர்.

Next Story