நெல்லை மாநகர புதிய போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு


நெல்லை மாநகர புதிய போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 6:47 PM GMT (Updated: 10 Jun 2021 6:47 PM GMT)

நெல்லை மாநகர புதிய போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

நெல்லை:
நெல்லை மாநகர போலீசில் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த மகேஷ்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கே.சுரேஷ்குமார் புதிய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சுரேஷ்குமார் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய துணை கமிஷனராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Next Story