ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் பீடி இலைகள் திருட்டு; 7 பேர் கைது


ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் பீடி இலைகள் திருட்டு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 7:28 PM GMT (Updated: 10 Jun 2021 7:28 PM GMT)

ஆலங்குளம் அருகே ரூ.3.76 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை திருடிச் சென்றதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் அருண்தங்கம் என்பவருக்கு சொந்தமான பீடி குடோன் உள்ளது. கடந்த 5-ந்தேதி இந்த குடோனின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.3.76 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் மற்றும் பீடி கட்டுகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அருண் தங்கம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த திருட்டில் நல்லூரை சேர்ந்த வைத்திலிங்கம் (வயது 42), காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த கணேஷ் பிரபு (36), ஆலங்குளத்தை சேர்ந்த வைத்திலிங்கம் (29), முத்துராஜ் (30), சொரிமுத்து (35), இசக்கிமுத்து (28), குருவன்கோட்டையை சேர்ந்த லிங்கம் (40) ஆகிய 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story