ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி அதிகாரி ஆய்வு


ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 10 Jun 2021 7:57 PM GMT (Updated: 10 Jun 2021 7:57 PM GMT)

ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்

அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் இருந்து பூங்குடி செல்லும் சாலையில் நேற்று இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக ரேஷன் கடைக்கு பொருட்கள் ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி பொருட்களின் அளவு, வாகன எண் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story