கூரை அமைத்தபோது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு


கூரை அமைத்தபோது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:28 PM GMT (Updated: 10 Jun 2021 8:28 PM GMT)

கூரை அமைத்தபோது தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகாந்தன்(வயது 41). எலக்ட்ரீசியன் மற்றும் பிட்டர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அருள்மொழி கிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பவர் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது சுமார் 12 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சொக்கலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story