வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு


வீட்டில் தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 8:28 PM GMT (Updated: 10 Jun 2021 8:28 PM GMT)

வீட்டில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி லதா (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டில் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story