இளம்பெண் மாயம்


இளம்பெண் மாயம்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:29 PM GMT (Updated: 10 Jun 2021 8:29 PM GMT)

இளம்பெண் மாயமானார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 21). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து பிரியதர்ஷினியின் அண்ணன் பிரித்திவிராஜ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வருகிறார்.

Related Tags :
Next Story