மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 8:43 PM GMT (Updated: 10 Jun 2021 8:43 PM GMT)

சிவகாசியில் மதுவிற்றவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சுக்கிரவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 60) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story