திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 3:39 PM GMT (Updated: 11 Jun 2021 3:39 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர்.

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆனால், தினமும் 350-க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் தினமும் சிலரின் உயிரை கொரோனா பறித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 486 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 5 பேரின் உயிரை கொரோனா பறித்தது.
இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 65 வயது முதியவர், 57 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகியோர் திண்டுக்கல்லில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், வத்தலக்குண்டுவை சேர்ந்த 43 வயது ஆண் மற்றும் நிலக்கோட்டையை சேர்ந்த 74 வயது முதியவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் இறந்தனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 207 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 29 ஆயிரத்து 962 ஆனது. அதேநேரம் 252 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 594 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 1,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story