கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 306 பேர் `டிஸ்சார்ஜ்'


கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 306 பேர் `டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 11 Jun 2021 5:53 PM GMT (Updated: 11 Jun 2021 5:53 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் ஒரே நாளில் 306 பேர் `டிஸ்சார்ஜ்' ஆகினர்.

புதுக்கோட்டை, ஜூன்.12-
தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து349 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரேனா சிகிச்சையில் நேற்று ஒரே நாளில் 306 பேர் `டிஸ்சார்ஜ்' ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து203 ஆக உயர்ந்தது.
மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 1,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொற்று சற்று குறைய தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் தமிழக அரசால் நேற்று மாலை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story