தடையை மீறி ஆர்ப்பாட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு


தடையை மீறி ஆர்ப்பாட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Jun 2021 7:35 PM GMT (Updated: 11 Jun 2021 7:35 PM GMT)

களக்காட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

களக்காடு:
களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 9-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்திற்கு தட்டுப்பாடு இன்றி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சுகுமாரன், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கொேரானா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 12 பேர் மீது களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story